நேட்டோ நட்பு நாடுகள் பாதுகாப்பு செலவினங்களை 05 வீதமாக அதிகரிக்க வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்!

நேட்டோ நட்பு நாடுகள் பாதுகாப்பு செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து சதவீதமாக அதிகரிக்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்த அதிகரித்து வரும் பாதுகாப்பு கவலைகளுக்கு மத்தியில், அமைப்பின் உறுப்பினர்கள் “போருக்குத் தயாராக” இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரஸ்ஸல்ஸில் நடந்த நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னதாக பேசிய ஹெக்செத், கூட்டணி குறியீட்டு சைகைகளுக்கு அப்பால் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், உறுதிமொழி உள்ளது. பாதுகாப்பு செலவினங்களில் ஐந்து சதவீதம். நாம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், உலகில் உள்ள அவசரம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, அது மிக முக்கியமானது.
எங்களுக்கு அதிக கொடிகள் தேவையில்லை. எங்களுக்கு அதிக சண்டை அமைப்புகள் தேவை. எங்களுக்கு அதிக மாநாடுகள் தேவையில்லை. எங்களுக்கு அதிக திறன்கள் தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.