இலங்கை

ஜிம்மி கார்டரின் மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி இரங்கல்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் மறைவையடுத்து அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

சமாதானம், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் அவரது அசாதாரண வாழ்க்கை வரையறுக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி என்று ஜனாதிபதி திஸாநாயக்க தனது செய்தியில் கார்ட்டரை விவரித்தார்.

2002 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டபோது, ​​உலகளாவிய சமாதானத்தை மேம்படுத்துவதில் ஜிம்மி கார்ட்டரின் முயற்சிகள் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டதாக ஜனாதிபதி திஸாநாயக்க தெரிவித்தார்.

“அனைவருக்கும் சிறந்த உலகத்தை கட்டியெழுப்புவதற்கான நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக அவரது மரபு வாழட்டும்” என ஜனாதிபதி திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!