ஆசியா

தென் சீனக் கடற்பகுதியில் மோதிக்கொண்ட கடலோர காவல் படகுகள் : அதிகரிக்கும் பதற்றம்!

தென் சீனக் கடலில் சீனா மற்றும் பிலிப்பைன்ஸுக்குச் சொந்தமான இரண்டு கடலோரக் காவல் படகுகள் மோதிக் கொண்டதாக இரு நாட்டு அதிகாரிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.

சீனாவின் கடலோரக் காவல்படையின் நடுக்கடலில் நங்கூரமிட்டிருந்த கடலோரக் காவல்படகு ஒன்று வேண்டுமென்றே கடித்ததாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய இந்த கடற்பகுதியில் ஏற்பட்ட 5வது மோதலாக நேற்று பதிவாகிய மோதல் பதிவாகியுள்ளது. “சபீனா ஷோல்” என்று அழைக்கப்படும் இந்த கடல் பகுதி கனிம வளங்கள், கச்சா எண்ணெய் மற்றும் மீன் வளங்கள் நிறைந்தது.

எனவே, இப்பகுதி தங்களுக்கு சொந்தமானது என சீனாவும், பிலிப்பைன்சும் கூறி வருகின்றன. புருனே, மலேசியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளும் தென் சீனக் கடலுக்கு உரிமை கோருகின்றன.

ஆனால், அந்த கடல் பகுதி தனக்கு சொந்தமானது என சீனா கூறிவருகிறது. இதனால் அந்த நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் அதிகரித்துள்ளன.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!