இலங்கையில் தேங்காய் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையில் தேங்காய் விலைகள் முந்தைய நிலைக்குத் திரும்பும் என்று தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மே மாதத்திற்குப் பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தேங்காய் இறக்குமதி செய்ய அனுமதி பெற்ற நிறுவனங்களின் உரிமையாளர்கள் அடுத்த சில நாட்களுக்குள் தேங்காய் இறக்குமதி நடவடிக்கைகளைத் ஆரம்பிப்பார்கள் என்று அதன் தலைவர் சாந்த ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.