ஆசியா

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து: 15 பேர் பலி, 44 பேர் படுகாயம்

சீனாவின் நான்ஜிங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் வெளியே ஓடி வந்தனர்.

இந்த தீ விபத்தில் பலர் தீ மற்றும் புகை மூட்டத்தில் சிக்கிக்கொண்டனர். இந்த கோர விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 44 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி பொலிஸார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். மேலும் தீயில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

இந்த தீ விபத்து குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது என தெரிய வந்தது. இந்த விபத்து குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!