ஆசியா

தாய்லாந்தில் வானில் இருந்து கொட்டிய பெருந்தொகை பணம் – வெளியான காரணம்

தாய்லந்தைச் சேர்ந்த பௌத்தத் துறவி ஒருவர் 150,000 பாத் ரொக்கத்தை வானிலிருந்து வீசியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமது 46ஆம் பிறந்தநாளையும் துறவியான 24ஆம் ஆண்டையும் கொண்டாடும் வகையில் அவர் இந்த செயலை செய்துள்ளார்.

Luang Phor Kaen எனும் அவர், அலங்கரிக்கப்பட்ட பாரந்தூக்கியினுள் அமர்ந்தவாறு ரொக்கத்தையும் பரிசுகளையும் காற்றில் பறக்கவிட்டார்.

லம்டுவான் (Lamduan) வட்டாரத்தில் உள்ள வாட் சுவான்னராட் ஃபொதியராம் ஆலயத்தில் (Wat Suwannarat Phothiyaram) இச்சம்பவம் நிகழ்ந்தது.

பௌத்தத் துறவிகளின் கலாசாரப்படி அவர்கள் பணம், பொருள், சொத்து என எதையும் சேர்த்து வைக்கக்கூடாது. மீறிச் செய்தால், அவர்கள் மோட்சம் பெற முடியாது என்ற நம்பிக்கை உள்ளது.

தம்மிடமுள்ள பணத்தைச் சமுதாயத்திற்கு விசித்திரமான முறையில் லுவாங் திருப்பித் தந்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!