இலங்கை

சுகாதார அமைச்சராக மீண்டும் ராஜிதவை நியமிக்க வாய்ப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இது குறித்த கலந்துரையாடல்,  சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் இடம்பெற்றுள்ளதாகவும் அறிய முடிகிறது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார சீரழிவுகளை கருத்தில்கொண்டு, அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்ல மீது  நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் கொண்டுவரவுள்ளதாக கலந்துரையாடல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே கலந்துரையாடி வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!