ஆசியா

சிங்கப்பூரில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா அலை!

சிங்கப்பூரில் மற்றுமொரு கொரோனா நோய்ப்பரவல் அலை ஏற்பட்டுள்ள போதிலும் தொற்றுச் சம்பவங்கள் கடுமையாக இல்லை எனவும் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.

தற்போது பரவியுள்ள தொற்றுச் சம்பவங்கள் XBB துணை ரகக் வைரஸ்களின் கலவைகளால் ஏற்பட்டவை என்று அமைச்சு தெரிவித்தது.

கடந்த மார்ச் (2023) மாதத்தின் கடைசி வாரத்தில் 28,410 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.

அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் அது இரு மடங்கு அதிகம். முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 14,467 ஆகப் பதிவானது.

மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அமைச்சு தெரிவித்தது.

அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கையும் குறைவாக இருக்கின்றது. மார்ச் மாதத்தின் கடைசியில் அந்த எண்ணிக்கை சரிந்தது.

சளி போன்ற இதர நிரந்தர சுவாச நோய்களைப் போன்றே கொரோனா நோய்ப்பரவல் அவ்வப்போது ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூரில் கொரோனா நிலவரம் மிக தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. கூடுதல் தடுப்பூசி போடுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்படுகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content