இலங்கை செய்தி

மூன்று லட்சம் ரூபா பெறுமதியாக காலணிகள் திருட்டு : திருடனை கண்டுபிடிக்க விசாரணை

அநுராதபுரம் ஜெயந்தி மாவத்தையில் அமைந்துள்ள விகாரையின் வாடகை அறையொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 300,000 ரூபா பெறுமதியான காலணிகள் திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகல், மீ கொல்ல, ஹிந்தகொல்ல பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த நண்பர் ஒருவருடன் இணைந்து பாதணிகளை தயாரித்து அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள ஒருவரிடம் விற்பனைக்காக ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அநுராதபுரம் ஜயந்தி மாவத்தையில் அமைந்துள்ள ஆலயத்தில் காலணிகளின் உரிமையாளர் அறையொன்றை வாடகைக்கு எடுத்து பாதணிகளை சேமித்து வைத்திருந்ததாகவும், பாதணிகளின் பெறுமதி 282,500 ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 8ஆம் திகதி இரவு குறித்த அறையின் சாவியை காலணி விற்பனை செய்யும் நபரிடம் உரிமையாளர் கொடுத்துவிட்டு குருநாகல் பகுதிக்கு சென்ற போதே இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, ஊழியர் அறையின் கதவை மூடிவிட்டு, சாவியை கதவில் வைத்துவிட்டு, மறுநாள் திரும்பி வந்து அறையின் கதவு திறந்திருப்பதைக் கண்டார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அல்லது குழுவை கைது செய்ய அனுராதபுரம் தலைமையக பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!