டிக் டாக் மூலம் 19 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக் கொண்ட யுவதிகள்

ஜார்ஜியாவில் பிறந்த பிறகு விற்கப்பட்ட இரண்டு இரட்டைக் குழந்தைகள் TikTok வீடியோக்களால் மீண்டும் இணைந்துள்ளனர்.
ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் டிக்டோக் வீடியோக்களைச் சேர்ப்பதன் மூலம் இரண்டு யுவதிகளும் ஒருவரையொருவர் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றதாகவும், பின்னர் அவர்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
அவர்கள் 19 வயதுடைய ஆமி மற்றும் அன்யோ என்ற இரட்டைப் பெண்கள் ஆவர்.
இந்தக் குழந்தைகள் பிறந்தவுடனேயே அவர்களின் தாய் குழந்தைகளை இரண்டு குடும்பங்களுக்கு விற்றுவிட்டார்.
இருவரும் தாயாரை தேட ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
(Visited 10 times, 1 visits today)