அரசியல் இலங்கை

யாழில் இன்று ஒன்றுகூடவுள்ள தமிழ் கட்சிகள்..

இலங்கையின் அரசமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் இன்று(03) புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் அவசரமாகச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அறியமுடிகின்றது.

அதேவேளை 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி இந்தக் கட்சிகள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் என்று தெரிகின்றது.13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து இலங்கை ஆட்சியாளர்களும் பேசி வருகின்ற நிலையில் அதனை முழுமையாக அமுல்ப்படுத்துமாறு இந்தியாவும் அழுத்தம் கொடுத்து வருகின்றது.

இந்நிலையில் அதனை அமுல்ப்படுத்துவது தொடர்பில் தமிழ்க் கட்சிகளிடையே ஒருமித்த நிலைப்பாடு இல்லை என்பதாக அரச தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்ழைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

ஒற்றையாட்சியின் கீழான 13ஆவது திருத்தததை முழுமையாக நிராகரிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ச்சியாகக் கூறிவருகின்றது.இதற்கமைய தமிழர் பரப்பிலுள்ள பல்வேறு தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து ஒருமித்து தீர்மானம் எடுக்கும் முகமாக இன்று யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகத் தெரியவருகின்றது.

இந்தக் கூட்டத்தில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்துமாறு இலங்கை ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி விசேட தீர்மானமொன்று எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!