செய்தி

4 வருடங்களுக்கு பிறகு முதலிடத்துக்கு முன்னேறிய Virat Kohli

  • January 14, 2026
  • 0 Comments

சர்வதேச கிரிக்கெட் சபையின் ICC ஒருநாள் ODI போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் விராட் கோஹ்லி Virat Kohli முதலிடம் பிடித்துள்ளார். ஐசிசி ஒருநாள் ODI , டி20 T- 20, டெஸ்ட் Test தொடருக்கான தரவரிசைப் பட்டியலை வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடுகின்றது. இதற்கமைய இவ்வாரத்துக்குரிய ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் ODI போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் விராட் கோஹ்லி, 4 ஆண்டுகளுக்கு முதலிடம் பிடித்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து தொடருக்கான முதல் […]

இலங்கை செய்தி

மோடியின் சிறப்பு தூதுவராகவே ஜெய்சங்கர் வருகிறார்: அநுரவுடன் நாளை சந்திப்பு!

  • December 22, 2025
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்   (22) இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவரின் இலங்கை விஜயத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை இன்று (22) வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையின் அடிப்படையில் இவ்விஜயம் இடம்பெறுகின்றது. பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு “ ஒப்பரேஷன் சாகர் பந்து” திட்டம் ஊடாக பல்வேறு உதவிகளை […]

அரசியல் இலங்கை செய்தி

இந்தியாவுடனான 7 ஒப்பந்தங்கள் மறைக்கப்படுவது ஏன்?

  • December 22, 2025
  • 0 Comments

இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தங்களை இலங்கை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ இந்திய பிரதமர் மோடி இலங்கை வந்திருந்தவேளை ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. மேற்படி ஒப்பந்தங்களுக்குள் சுகாதாரத்துறை தொடர்பான ஒப்பந்தமும் உள்ளது. இவற்றை வெளிப்படுத்துமாறு நாம் வலியுறுத்தி வருகின்றோம். எனினும், […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை நோக்கி சர்வதேச பிரதிநிதிகள் படையெடுப்பு: முக்கிய புள்ளிகளை களமிறக்கும் டில்லி, பீஜிங்!

  • December 21, 2025
  • 0 Comments

சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலையியல் குழு தலைவர் ஜாவோ லெஜி நாளை மறுதினம் (23) இலங்கை வருகின்றார். சீனாவில் அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அடுத்தப்படியாக அரசாங்கத்தின் மூன்றாவது முக்கிய நபராக இவர் கருதப்படுகின்றார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (23) கொழும்புவரும் நிலையிலேயே இவரது விஜயமும் இடம்பெறுகின்றது. ஜாவோ லெஜியின் கொழும்பு பயணம் தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே வெளியாக இருந்தன. இவ்விஜயத்தின்போது அவர் இலங்கை மீண்டெழுவதற்குரிய உதவித்திட்டங்களையும் அறிவிக்க இருந்தார். இந்நிலையிலேயே […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கைக்காக களமிறங்கும் இந்தியா: ஜெய்சங்கரிடம் மோடி அனுப்பும் செய்தி என்ன?

  • December 20, 2025
  • 0 Comments

சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை தயாராகிவரும் நிலையில், இது விடயத்தில் இந்தியா முக்கிய வகிபாகத்தை வகிக்குமென தெரியவருகின்றது. தனது இலங்கை பயணத்தின்போது கொழும்பில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஊடக சந்திப்பின்போது இது தொடர்பான அறிவிப்பை இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளியிடவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடனேயே எதிர்வரும் 22 அல்லது 23 ஆம் திகதி கலாநிதி எஸ். ஜெய்சங்கர் கொழும்பு வருகின்றார். பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு முதன் முதலில் இந்தியாவே நேசக்கரம் நீட்டியது. மீட்பு […]

அரசியல் இலங்கை செய்தி

புலம்பெயர் இலங்கையர்களுக்கு நன்றி தெரிவிப்பு: சர்வதேச உதவி குறித்தும் விளக்கம்!

  • December 16, 2025
  • 0 Comments

இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் வெளிப்படைத்தன்மையுடனேயே கையாளப்பட்டுவருகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க நிர்வாகப் பொறிமுறை ஊடாக உரிய வகையில் உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டுவருகின்றன எனவும் அவர் கூறினார். இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் தொடர்பில் வெளிப்படைதன்மை இல்லை என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டு தொடர்பில் வெளிவிவகார அமைச்சரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ பேரிடரின் பின்னர் இலங்கைக்கு சர்வதேச உதவிகள் கிடைக்க ஆரம்பித்தன. முதல் ஆறு மணி நேரத்துக்குள்ளேயே […]

இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ தொடர்கிறது டில்லியின் உதவி: சிறப்பு விமானமும் அனுப்பி வைப்பு!

  • December 9, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக இந்தியா சகல வழிகளிலும் உதவி வருகின்றது. அந்தவகையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப்பணிகளில் ஈடுபடுவதற்காக, இந்திய விமானப்படையின் எம்ஐ-17 உலங்குவானூர்தி, இன்று முற்பகல் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்தது. சாகர் பந்து நடவடிக்கைக்காக முன்னர் பயன்படுத்தப்பட்ட இரண்டு எம்ஐ-17 உலங்குவானூர்திகள் அத்தியாவசிய பராமரிப்புக்காக இந்தியாவுக்குத் திரும்பிய நிலையில், இந்த உலங்குவானூர்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இன்று வந்த உலங்குவானுர்தியில் 14 பேர் கொண்ட இந்திய விமானப்படை குழு வந்துள்ளது. […]

இலங்கை

இந்தியா, சீனா தலைமையில் இலங்கைக்காக சர்வதேச மாநாடு!

  • December 8, 2025
  • 0 Comments

இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் இணைத்தலைமையின் கீழ் இலங்கைக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில பரிந்துரைத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த யோசனையை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ டிட்வா சூறாவளியால் இலங்கைக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. 8 பில்லியன் டொருக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இழப்பை இலங்கையால் தனித்து ஈடுசெய்ய முடியாது. எனவே, இந்தியா, […]

அரசியல் ஆஸ்திரேலியா இந்தியா செய்தி

இந்திய, ஆஸ்திரேலிய பிரதமர்கள் தென்னாபிரிக்காவில் சந்திப்பு!

  • November 22, 2025
  • 0 Comments

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பிரதமர்களுக்கிடையிலான இரு தரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவில் நடைபெறும் ஜி – 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸி ஆகியோர் அந்நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு வைத்தே இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் பற்றி கலந்துரையாப்பட்டது. இந்தோ – பசுபிக் பாதுகாப்பு உட்பட மேலும் பல விடயங்கள் சம்பந்தமாகவும் பேசப்பட்டுள்ளன. “ ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ{டன் மிகச் […]

அரசியல் இலங்கை

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார் இலங்கை பாதுகாப்பு செயலர்! 

  • November 22, 2025
  • 0 Comments

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும், இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் 7வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டக் கூட்டத்தின் ஒரு பகுதியாக மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு தரப்பு அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். இந்தச் சந்திப்பின் போது, இரு தரப்பினரும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபட்டனர் என்று […]

error: Content is protected !!