இலங்கை

இலங்கை ஜனாதிபதியின் விசேட உரை! கொழும்பில் ஒலித்த வாணவேடிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு தனது உரையை சற்று முன்னர் ஆரம்பித்த போது கொழும்பில் வாணவேடிக்கைகள் ஒலித்தன.

தேர்தல்களை முன்னிட்டு இலங்கையின் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையிலேயே, ரணில் விக்ரமசிங்க இந்த உரையை ஆற்றியுள்ளார்.

கைச்சாத்திடப்பட்ட கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையின் படி இலங்கை 2028ஆம் ஆண்டு வரை கடனைத் திருப்பி செலுத்த வேண்டியதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இன்று ஆற்றிய விசேட உரையின் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

2048ஆம் ஆண்டு வரை கடனை மீளச் செலுத்துவதற்கு சலுகையுடன் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தீர்வற்று வங்குரோத்து நிலையில் இருந்த இலங்கை, இரண்டு வருடங்களில் மீண்டுள்ளது. உலகில் இவ்வாறு ஒரு சில நாடுகளே குறுங்காலத்தில் மீண்டுள்ளன.

பொருளாதாரத்தில் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கையாண்ட அதே வியூகங்கள் மூலம் இலங்கை 2048ஆம் ஆண்டில் அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content