இலங்கை செய்தி

குறைந்த புவியீர்ப்பு விசையால் இலங்கைக்கு கிட்டியுள்ள நன்மைகள்

குறைந்த புவியீர்ப்பு விசை என்பது பூமியின் இயற்கையான வரப்பிரசாதம் என பேராதனை பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

புவியீர்ப்பு விசை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே பேராசிரியர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“ஈர்ப்பு விசை குறைவாக இருப்பதால், தரையில் இருந்து எதையாவது தூக்கி எறியும் போது, ​​மற்ற இடங்களை விட நாம் கொடுக்க வேண்டிய ஆற்றல் குறைவாக இருக்கும்.

உதாரணத்தை எடுத்துக் கொண்டால், அமெரிக்காவின் Point Canaveral இல் இருந்து ஒரு ரொக்கட்டை சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஆற்றலை விட குறைவான ஆற்றலுடன் நமது இலங்கைப் பிரதேசத்தில் இருந்து ராக்கெட்டை மேலே தூக்கிச் செல்ல முடியும்.

டொலர்களின் அடிப்படையில் இதுவும் பெரிய மதிப்பு. விண்வெளிக்கு வாகனங்களை அனுப்புவதற்கு இலங்கை சிறந்த இடம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, குறைந்த புவியீர்ப்பு பூமியின் இயற்கையான பரிசு என்று கூறப்படுகிறது. பூமியின் குறைந்த புவியீர்ப்பு புள்ளி இலங்கையின் தெற்கு முனையில் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

அதாவது புவியீர்ப்பு விசை மாற்றம் தொடர்பாக நாசா பல வருடங்களாக நடத்திய ஆராய்ச்சிக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!