முக்கிய செய்திகள்

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வீட்டிற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

பிரதமர் ஷேக் ஹசீனா திங்கள்கிழமை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து நாட்டில் வன்முறை மற்றும் குழப்பம் நீடித்ததால், வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரப் பின் மோர்டாசாவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது.

மோர்டாசா குல்னா பிரிவில் உள்ள நரைல்-2 தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார், இந்த ஆண்டு தொடக்கத்தில் வங்காளதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது அவாமி லீக் வேட்பாளராக தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.

பாரிய மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் மோர்டாசாவின் வீட்டை போராட்டக்காரர்கள் நாசம் செய்து தீ வைத்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

TJenitha

About Author

You may also like

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • April 20, 2023
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10 சத வீதம் அதிகரித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்
error: Content is protected !!