முக்கிய செய்திகள்

சிரியா பாதுகாப்பு அமைச்சின் மீது இஸ்ரேல் உச்சக்கட்ட தாக்குதல்

சிரியாவின் ஸ்வெய்டா நகரில், சிறுபான்மையான ட்ரூஸ் மதத்தினர் மற்றும் அரபு பழங்குடியினர் இடையே அண்மையில் கடுமையான மோதல் வெடித்தது.

இதில் அரபு பழங்குடியினருக்கு ஆதரவாக களமிறங்கிய சிரிய ராணுவம், ட்ரூஸ் மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது. இதனால் பலர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்கு எதிர்வினையாக, இஸ்ரேலில் வசிக்கும் ட்ரூஸ் மதத்தினர், இஸ்ரேல்-சிரியா எல்லையில் உள்ள தடுப்பு வேலிகளை உடைத்து சிரியாவுக்குள் நுழைந்தனர்.

இவர்கள் பெரும்பாலும் இஸ்ரேல் ஆதரவாளர்களாக உள்ளதால், அவர்களுக்கு பாதுகாப்பளிக்க இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் ராணுவம் சிரியா பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் மீது உச்சக்கட்ட வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது இருநாடுகளுக்கிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

 

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • April 20, 2023
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10 சத வீதம் அதிகரித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்
Skip to content