சிவப்பு எச்சரிக்கை : மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு
தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் குறித்த சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை டிசம்பர் 9 ஆம் திகதி முதல் டிசம்பர் 19 ஆம் திகதி வரை பாதுகாப்பான தற்காலிக மையங்களுக்கு அப்புறப்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மாவட்டச் செயலாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
இந்த மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை மாவட்டச் செயலாளர், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள், பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர், இலங்கை பொலிஸ் மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினரின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் பாதுகாப்பான மையங்களுக்கு அப்புறப்படுத்தப்பட வேண்டிய பிரதேச செயலாளர் பிரிவுகள் பின்வருமாறு:
கண்டி மாவட்டம்:
ஹத்தரலியத்த,
யடிநுவர,
உடுதும்பர,
பாதஹேவாஹேட்ட,
மெததும்பர,
பஸ்பாகேகோரளை,
தெல்தோட்ட,
பூஜாபிட்டிய,
கங்கஇஹல கோரளை,
பன்வில,
கங்கவட்ட கோரளை,
உடபலாத்த,
ஹாரிஸ்பத்துவ,
குண்டசாலை,
மினிப்பே,
தொழுவ,
தும்பனே,
அக்குரணை,
உடுநுவர
பாததும்பர.
கேகாலை மாவட்டம்:
கேகாலை,
கலிகமுவ,
மாவனெல்ல,
புலத்கொஹுபிட்டிய,
அரநாயக்க,
யட்டியாந்தோட்ட,
ரம்புக்கனை,
வரகாபொல.
குருநாகல் மாவட்டம்:
மாவத்தகம,
மல்லவப்பிட்டிய,
ரிதிகம.
மாத்தளை மாவட்டம்:
நாவுல,
வில்கமுவ,
பல்லேபொல,
அம்பன்கங்ககோரளை,
லக்கல,
பல்லேகம,
உக்குவெல,
இரத்தோட்ட,
மாத்தளை
யடவத்த.




