ஆசியா செய்தி

சீனாவில் காலுறைகளை நுகர்ந்த நபருக்கு நேர்ந்த கதி – அதிர்ச்சியில் மருத்துவர்கள்

சீனாவின் சொங்சிங் மாநிலத்தில் காலுறைகளை நுகர்ந்த நபருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அலுவலக ஊழியரான அவர் அண்மையில் ஓயாத இருமல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெறச் சென்றார்.

அவரின் இருமல் மிக மோசமாக இருந்ததால் இரவில் சரியான தூக்கமின்றிக் கண்கள் சிவந்துள்ளது. பரிசோதனையின்போது அவருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டதை மருத்துவர் உறுதிசெய்தார்.

அதைப் பற்றி உரையாடியபோது தனக்கு காலுறைகளை நுகரும் பழக்கம் இருப்பதை மருத்துவர் அறிந்தார்.

மருத்துவர் உடனடியாக குறித்த நபரின் காலுறைகளைச் சோதித்ததில் அவற்றில் Aspergillus எனும் கிருமி இருப்பதை உறுதி செய்தார்.

அந்தக் கிருமியின் காரணமாகவே அவருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டது எனவும் மருத்துவர் விளக்கினார்.

நாள்முழுவதும் அணியும் காலுறைகளில் வியர்வை படிவதாலும் காலணிகளில் உருவாகும் புழுக்கத்தினாலும் கிருமி உருவாகிறது என்று மருத்துவர் கூறினார்.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!