ஆன்மிகம்

தேவாரம்

திருஞானசம்பந்தர்

82) திருஅவள் இவள்நல்லூர் – திருவிராகம் – சாதாரி
3679) கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை, புரிநூலொடு குலாவி,

தம் பரிசினோடு சுடுநீறு தடவந்து, இடபம் ஏறி,

கம்பு அரிய செம்பொன் நெடுமாட மதில், கல்வரை வில் ஆக,

அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே.1உரை

இறைவர் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மாலை அணிந்தவர்.

முப்புரிநூல் அணிந்த திருமார்பினர். திருவெண்ணீறு பூசியவர். இடப வாகனத்தில் ஏறி வீற்றிருப்பவர்.

ஆகாயத்தில் திரிந்த பொன், வெள்ளி, இரும்பு ஆகிய கோட்டைகளின் மதில்களை, மேருமலையை வில்லாகக் கொண்டு அம்பு எய்து எரித்தவர்.

அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலம் திரு அவளிவணல்லூர் ஆகும்.

திருச்சிற்றம்பலம்.

(Visited 57 times, 1 visits today)

NR

About Author

You may also like

ஆன்மிகம்

சுவாமி சரணம்

  • April 27, 2023
ஸ்ரீமத் பாகவதத்திலே ஆறாவது ஸ்கந்தத்திலே #பரீக்ஷித்_மகாராஜா சுகப்பிரும்மரைப் பார்த்துக் கேள்விகள் கேட்கிறான். அதிலே ஒரு கேள்வி: ‘சுவாமி! பிராயச்சித்தம் என்று சில கர்மாக்கள் சொல்லப் பட்டிருக்கின்றன –
ஆன்மிகம்

கண்ணன் வருவான்

  • April 27, 2023
பத்தாவது வயதில், கம்ச வதம் முடிந்தது. உடனே ஸ்ரீகிருஷ்ணன் என்ன செய்தான் தெரியுமா? விறுவிறுவென காராக்கிரகம் நோக்கி ஓடிவந்து, வசுதேவரையும் தேவகியையும் பார்த்து, பார்த்த மாத்திரத்தில் தடாலென