ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் புற்றுநோயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை : முதற்கட்ட சிகிக்சைக்காக மாதக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்!

பிரித்தானியாவில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த இலக்கை விட அதிகரித்துள்ள நிலையில், சிக்சைக்காக நீண்டநாள் காத்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்படி நோயாளிகள் சிகிச்சை அளிப்பது என்று முடிவெடுத்த பிறகும், முதல் சிகிச்சைக்காக ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

NHS இன் சமீபத்திய புள்ளிவிபரங்களின் அடிப்படையில், மக்கள் தொகையில் 9.5 வீதமானோர் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருப்பதாக கூறப்படுகிறது. இது நிர்ணயித்த இலக்கை விட நான்கு மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23.2 சதவீதாமானோர் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பதாகவும், இது கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கூடுதலாக, நோயாளிகள் கதிரியக்க சிகிச்சைக்காக முன்னெப்போதையும் விட நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம்,  வழக்கமான மருத்துவமனை சிகிச்சைகளைத் தொடங்கக் காத்திருப்பவர்களுக்கான காத்திருப்புப் பட்டியலும் உச்சத்தை எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 17 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்