இலங்கை செய்தி

மரத்திலேயே உயிரிழந்த நபர்

வீடு ஒன்றில் தேங்காய் பறிக்க சென்ற நபர் ஒருவர் தென்னை மரத்தின் நடுப்பகுதியில் சாய்ந்திருந்த மற்றுமொரு மரத்தின் கிளையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

ஹொரணை, வெலிகல திப்பொதுகொட பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்து.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய சஞ்சீவ பிரியங்கர என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வேலைக்காக தேங்காய் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உயிரிழந்த நபர், இன்று (20) காலை வீடொன்றில் தேங்காய் பறிக்கச் சென்ற போதே இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

சம்பவத்தை கண்ட பிரதேசவாசிகள் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு தகவல் வழங்கியதையடுத்து, ஹொரணை திடீர் மரண விசாரணை அதிகாரி சுமேதா குணவர்தன மற்றும் பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், ஹொரணை தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு மரத்திலிருந்து இறந்தவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் சட்ட வைத்திய பணிகளுக்காக ஹொரண ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content