ஆசியா செய்தி

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயம்

  • September 30, 2025
  • 0 Comments

மத்திய பிலிப்பைன்ஸின் கடற்கரையில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நில அதிர்வு அலுவலகம், கடலில் சிறிதளவு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்ததுடன், லெய்ட், செபு மற்றும் பிலிரான் ஆகிய மத்திய தீவுகளில் வசிப்பவர்கள் கடற்கரையிலிருந்து விலகி இருக்கவும், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்” என்றும் வலியுறுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கங்களால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிலநடுக்கத்தால் பிலிப்பைன்ஸின் […]

ஆசியா செய்தி

பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஐவர் மரணம்

  • September 30, 2025
  • 0 Comments

மத்திய பிலிப்பைன்ஸின் கடற்கரையில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். செபு தீவின் வடக்கே உள்ள ஒரு நகரமான சான் ரெமிகியோவில் ஐந்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. செபுவின் வடக்கு முனையிலும், 90,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் போகோ நகரத்திற்கு அருகிலும் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. “சிறிய கடல் மட்டக் குழப்பம்” காரணமாக செபு, லெய்ட் மற்றும் பிலிரான் மாகாணங்களில் வசிப்பவர்கள் கடற்கரையிலிருந்து விலகி […]

ஆப்பிரிக்கா செய்தி

காங்கோ குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ஜோசப் கபிலாவுக்கு மரண தண்டனை

  • September 30, 2025
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) உள்ள ஒரு இராணுவ நீதிமன்றம், முன்னாள் ஜனாதிபதி ஜோசப் கபிலாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இராணுவ நீதிமன்றத்திற்கு தலைமை தாங்கிய லெப்டினன்ட் ஜெனரல் ஜோசப் முடோம்போ கட்டாலாய், ஜோசப் கபிலா தேசத்துரோகம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், கொலை, பாலியல் வன்கொடுமை, சித்திரவதை மற்றும் கிளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக குற்றவாளி என்று தெரிவித்துள்ளார். நாட்டின் கிழக்குப் பகுதி முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கிளர்ச்சிக் குழுவான M23ஐ ஜோசப் கபிலா ஆதரித்து வருவதாக […]

செய்தி விளையாட்டு

Womens WC – இந்திய அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

  • September 30, 2025
  • 0 Comments

13வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன. இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் கவுகாத்தியில் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய மகளிர் அணி 7 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 269 ஓட்டங்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 270 என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆரம்பத்தில் இந்திய அணியை பந்தாடிய இலங்கை […]

உலகம் செய்தி

நாடு திரும்பிய கர்நாடகாவில் குழந்தைகளுடன் குகையில் வசித்து வந்த ரஷ்ய பெண்

  • September 30, 2025
  • 0 Comments

கர்நாடகாவில் உள்ள ஒரு குகையில் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்த ரஷ்யப் பெண் ஒருவர் ரஷ்யா திரும்பியுள்ளதாக மனித உரிமைகள் பாதுகாப்புக் குழுவின் துணைத் தலைவர் இவான் மெல்னிகோவ் தெரிவித்துள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றம், அவர்கள் திரும்பி வருவதற்கு வசதியாக பயண ஆவணங்களை வழங்க மத்திய அரசுக்கு அனுமதி அளித்தது. அவர்கள் மறுநாள் ரஷ்யாவுக்குச் சென்றனர் என்று வெளிநாட்டினரின் பிராந்திய பதிவு அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நீனா குடினா என அடையாளம் காணப்பட்ட அந்தப் […]

செய்தி வட அமெரிக்கா

அண்டை வீட்டார் உணவளித்ததற்காக வளர்ப்பு மயில்களை கொன்று சாப்பிட்ட அமெரிக்கர் கைது

  • September 30, 2025
  • 0 Comments

புளோரிடாவைச் சேர்ந்த 61 வயதான கிரெய்க் வோக்ட், அண்டை வீட்டார் தனது இரண்டு செல்ல மயில்களுக்கு உணவளித்ததற்காக பழிவாங்கும் நோக்கில் அதை கொன்று சமைத்து சாப்பிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அண்டை வீட்டாருக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “மயில்களுக்கு உணவளித்ததால் தான் மயில்களைக் கொன்று சமைத்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார். செல்லப் பறவைகள் தொடர்பாக அண்டை வீட்டாருக்கும் இவருக்கும் வாய்மொழி வாக்குவாதம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் மீது மிருகவதை தொடர்பான மூன்றாம் நிலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு […]

இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் பதிவிற்காக சுட்டுக்கொல்லப்பட்ட 16 வயது சிறுவன்

  • September 30, 2025
  • 0 Comments

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் சமூக ஊடகப் பதிவிற்காக இந்துத்துவா அமைப்பின் 16 வயது இளம் தொண்டர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கட்கர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட டெஹ்ரி கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தடயவியல் குழு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய சந்தேக நபரின் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் அதிகாரி வருண் குமார் குறிப்பிட்டுள்ளார். சூரஜ் நகர் பீட்டல் பஸ்தியைச் […]

செய்தி வட அமெரிக்கா

20 வருட கார் விபத்து வழக்கில் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்ட 54 வயதான இந்தியர்

  • September 30, 2025
  • 0 Comments

17 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியா அமெரிக்காவிற்கு நாடு கடத்தும் பணியை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் தேடப்படும் இந்திய குடிமகனை குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்காக அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு 44 வயது நபர் ஒருவரின் உயிரைப் பறித்த விபத்தில் இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற 54 வயதான கணேஷ் ஷெனாய், மும்பையில் அமெரிக்க மார்ஷல்ஸ் சேவையால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்டதாக நாசாவ் கவுண்டி வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. “பல தசாப்தங்களாக சட்ட […]

இந்தியா செய்தி

ஜார்க்கண்டில் திருடப்பட்ட 40 லட்சம் மதிப்புள்ள யானை பீகாரில் மீட்பு

  • September 30, 2025
  • 0 Comments

ஜார்க்கண்டின் பலாமு மாவட்டத்தில் இருந்து திருடப்பட்டு 27 லட்சத்திற்கு விற்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் யானை பீகாரின் சப்ரா மாவட்டத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த நரேந்திர குமார் சுக்லா, ஜார்க்கண்டின் பலாமு மாவட்டத்தின் சுகூர் பகுதியில் இருந்து ‘ஜெயமதி’ என்ற பெண் யானை திருடப்பட்டது குறித்து செப்டம்பர் 12 புகார் அளித்திருந்தார். நரேந்திர குமார் சுக்லாராஞ்சியில் இருந்து 40 லட்சத்திற்கு யானையை வாங்கியிருந்தார். “திருட்டு வழக்கு சதார் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது, […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

பிரான்சுக்கான தென்னாப்பிரிக்க தூதர் பாரிஸில் மரணம்

  • September 30, 2025
  • 0 Comments

பிரான்சுக்கான தென்னாப்பிரிக்க தூதர் பாரிஸின் மேற்கில் உள்ள ஹயாட் ரீஜென்சி ஹோட்டலின் அடிவாரத்தில் உயிரிழந்து கிடந்ததாக வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 58 வயதான தூதர் என்கோசினாதி இம்மானுவேல் நாதி ம்தேத்வா டிசம்பர் 2023ல் நியமிக்கப்பட்டதிலிருந்து பிரான்சுக்கான தூதராகப் பணியாற்றி வருகிறார். ஆரம்பத்தில் ம்தெத்வா காணாமல் போனதாக அவரது மனைவியால் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ம்தெத்வாவின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்த விசாரணை நடந்து வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் வெளியுறவுத் துறை ம்தெத்வாவின் மரணத்தை உறுதிப்படுத்தியது, சம்பவம் […]