இலங்கை

இலங்கையில் வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம் – 7000 முறைப்பாடுகளை பதிவு செய்த மக்கள்

இலங்கையில் பொலிஸ் தலைமையகத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட, வட்ஸ்அப் இலக்கத்துக்கு முறைப்பாடுகள் குவிந்துள்ளது.

இதுவரை சுமார் 7,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

அவற்றில், பொலிஸார் தொடர்பான அனைத்து முறைப்பாடுகள் குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கு உடனடி தீர்வுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைக்குரிய சூழ்நிலைகள் குறித்து பொதுமக்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க, அண்மையில் 071 8598 888 என்ற வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த இலக்கத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற சில முறைப்பாடுகள் பொலிஸாருடன் தொடர்புடையவை அல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் போது பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகளை மாத்திரம் குறிப்பிடுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்