ஆசியா செய்தி

ஜப்பானில் வரலாறு காணாத அளவு பாதிப்பு – கை, கால், வாய்ப் புண் நோயால் தவிக்கும் மக்கள்

ஜப்பானில் வரலாறு காணாத அளவுக்கு கை, கால், வாய்ப் புண் நோய்ச் சம்பவங்கள் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதன் எண்ணிக்கை இருப்பதாக ஜப்பானின் தேசியத் தொற்றுநோய்க் கழகம் கூறியது.

இம்மாதத்தின் முதல் வாரத்தில் 35,960 சம்பவங்கள் பதிவாகின. சுத்தத்தைப் பேணுவதில் அக்கறை காட்டுமாறு ஜப்பானியச் சுகாதார அமைச்சு மக்களைக் கேட்டுக்கொண்டது.

கைகளில், கால்பாதங்களில், வாய்க்குள் கொப்பளங்களை ஏற்படுத்தும் அந்தக் கிருமித்தொற்று பொதுவாக 5 வயதுக்குக் குறைவான பிள்ளைகளை அதிகம் தாக்குகிறது.

காய்ச்சல், பசியின்மை, உடல்சோர்வு, தோலில் தடிப்புகள், தொண்டை வலி ஆகியவை அந்நோயின் அறிகுறிகள்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!