ஆஸ்திரேலியா இன்றைய முக்கிய செய்திகள் முக்கிய செய்திகள்

சிட்னியிலிருந்து நியூசிலாந்து சென்ற விமானத்தில் பதற்றம் – மேடே அழைப்பு விடுத்த விமானி

அவசரநிலை காரணமாக சிட்னியில் இருந்து நியூசிலாந்து சென்ற போயிங் 737 குவாண்டாஸ் விமானத்தில் மேடே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் தீ விபத்து ஏற்படும் அபாயம் இருந்ததால் விமானி மேடே அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

விமானத்தின் சரக்கு பகுதியில் உள்ள தீ எச்சரிக்கை ஒளிர, இது ஒரு ஆபத்தான சூழ்நிலை என்று கருதி விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த சூழ்நிலை காரணமாக ஒக்லாந்து விமான நிலையத்தில் பல அவசர சேவைகள் தயார் நிலையில் இருந்தன, மேலும் 16 தீயணைப்பு இயந்திரங்களுடன் சிறப்பு பேரிடர் சேவைகளும் அழைக்கப்பட்டன.

பின்னர், விமானம் காலை 11.05 மணியளவில் ஆக்லாந்து விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக வந்தடைந்துள்ளது.

விமானத்தில் 156 பயணிகள் இருந்தனர், அவர்கள் பாதுகாப்பாக விமான நிலையத்தை அடைந்தனர்.

(Visited 36 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித