குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து விடைபெற தயார்: சிறிதரன் எம்.பி. பகிரங்கம்!
“அரசியலமைப்பு பேரவை விவகாரம் தொடர்பில் தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு தயார்.” – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் S. Siridaran தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் ITAK நாடாளுமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து சிறிதரன் எம்.பி. தெரிவிக்கப்பட்டுள்ளார். அப்பதவி நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே சிறிதரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். “அரசியலமைப்பு பேரவையில் இராணுவத்துக்கு ஆதரவாக […]









