அரசியல் இலங்கை செய்தி

ரூ.20 லட்சத்துக்கு ஆசைப்பட்டு வீட்டு கூரைகளை கழற்றிய அர்ச்சுனா எம்.பி.!

  • December 20, 2025
  • 0 Comments

“அனர்த்தத்தால் வீட்டுகூரை சேதமடைந்திருந்தால்கூட கொடுப்பனவு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் எனக்கு அவ்வாறு எவ்வித கொடுப்பனும் கிடைக்கப்பெறவில்லை.” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் நகைச்சுவை பாணியில் இவ்வாறு கூறினார். “ அனர்த்தத்தால் சேதமடைந்த வீட்டு கூரையொன்றுக்கு 10 லட்சம் ரூபா வழங்கப்படும் என ஆளுங்கட்சியால் அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதனால் நான் எனது வீட்டில் இருந்த இரு கூரைகளை கழற்றினேன். 20 லட்சம் ரூபா கிடைக்கும் என நம்பினேன். ஆனால் […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? திங்கள் மதிப்பீட்டு அறிக்கை கையளிப்பு!

  • December 19, 2025
  • 0 Comments

பேரிடரால் இலங்கைக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பான உத்தேச மதிப்பீட்டு அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை உலக வங்கியால் கையளிக்கப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு, “ பேரிடரால் ஏற்பட்ட மொத்த இழப்பு தொடர்பான உத்தேசத்தை மேற்படி அறிக்கைமூலம் அறியமுடியும். 500 பில்லியன் ரூபா மேலதிக நிதி சந்தைக்குவரும்போது ஏற்படும் பணவீக்கம் தொடர்பான காரணங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனில் பொருட்கள் […]

இலங்கை செய்தி

பேரிடரால் சேதமடைந்த மத, தொல்பொருள் தளங்களை மீளமைக்க நடவடிக்கை!

  • December 19, 2025
  • 0 Comments

அனர்த்தத்தினால் சேதமடைந்த மத, கலாசார மற்றும் தொல்பொருள் தளங்களை விரைவாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது. டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் தளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனரமைப்பு பணிகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பௌத்த பீடங்களின் மகா சங்கத்தினர் உட்பட சர்வமதத் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். ” […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசு பொறுப்பு கூறவேண்டும்: நாடாளுமன்றில் வலியுறுத்து

  • December 19, 2025
  • 0 Comments

பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (18) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “தாழமுக்கம் தாக்கம் ஏற்படுவதால் சீரற்ற காலநிலை நிலவக்கூடும், இதற்கு தயாராக வேண்டும் என வளிமண்டளவியல் திணைக்களம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது. வெள்ள அபாயம் குறித்தும் எச்சரிக்கப்பட்டிருந்தது. எனினும், அரசாங்கத்தால் […]

அரசியல் இலங்கை செய்தி

குறைநிரப்பு பிரேரணைக்கு ஆதரவு: எதிர்க்கட்சி தலைவர் அறிவிப்பு!

  • December 18, 2025
  • 0 Comments

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவர் இந்த அறிவிப்பை விடுத்தார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரண உதவி உள்ளிட்ட விடயங்களுக்காக அவசர நிதியாக 500 பில்லியன் ரூபா கோரும் குறைநிரப்பு பிரேரணை சபையில் இன்று முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் நாளை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையிலேயே அதற்கு ஆதரவளிக்கப்படும் என சஜித் கூறினார். அத்துடன், பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடர் குறித்து ஆராய தெரிவுக்குழு: பிரேரணை நாளை கையளிப்பு!

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்ககோரும் யோசனை நாளை (18) சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. எதிரணிகளின் சார்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது. டித்வா புயல் தாக்கம் உட்பட சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது என எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இவ்வாறு எச்சரிக்கை விடுத்தும், அனர்த்தங்களை குறைப்பதற்கு – கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற விமர்சனத்தையும் முன்வைத்துவருகின்றன. இந்நிலையிலேயே இது […]

அரசியல் இலங்கை செய்தி

அவசரகால சட்டம் “அரசியல் ஆயுதமா”?

  • December 17, 2025
  • 0 Comments

அவசரகால சட்டம் அடக்குமுறைக்காக பயன்படுத்தப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவசரகால சட்டம் அமுலாகும் விதம் தொடர்பில் எதிரணிகளால் முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்கள் தொடர்பில் அமைச்சரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ பேரிடர் காலகட்டத்தில் அவசர கால சட்டத்தை அமுல்படுத்துவதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை. பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா விதங்களிலும் உதவும் வகையிலேயே மேற்படி சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அச்சட்டம் எந்த சந்தர்ப்பத்திலும் அடக்குமுறைக்காக பயன்படுத்தப்படவில்லை. அரசியல் நோக்கங்களுக்காக கையாளப்படவும் இல்லை. […]

செய்தி

உலக வங்கியின் மதிப்பீட்டு அறிக்கை வெளியான பின்பு சர்வதேச கொடையாளர் மாநாடு!

  • December 15, 2025
  • 0 Comments

சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துவருகின்றதென அறியமுடிகின்றது. பேரிடர் மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் மீண்டெழுதல் உள்ளிட்ட விடயங்களுக்காகவே இம்மாநாடு நடத்தப்படவுள்ளது. பேரிடரால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அவற்றை மீளமைக்க ஏற்படும் செலவுகள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலக வங்கி இதற்குரிய ஏற்பாட்டை செய்துவரும் நிலையில், அது தொடர்பான ஆரம்பக்கட்ட அறிக்கையில் விரைவில் வெளியிடவுள்ளது. இந்த மதிப்பீடுகள் நிறைவடைந்த பின்னர், சர்வதேச நாடுகள் பங்கேற்கும் கொடையாளர் மாநாடு நடத்தப்படும் என தெரியவருகின்றது. சர்வதேச கொடையாளர் மாநாட்டை […]

அரசியல் இலங்கை செய்தி

பிரதமருக்கு நாமல் நன்றி தெரிவிப்பு!

  • December 13, 2025
  • 0 Comments

விசேட நாடாளுமன்ற அமர்வை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் விசேட கூட்டத்தொடர் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறும் என்று சபாநாயகர் இன்று அறிவித்தார். வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடருக்கு பின்னர் 2026 ஜனவரி 6 ஆம் திகதிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. எனினும், பிரதமர் கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் அவசர நாடாளுமன்ற அமர்வை கூட்டுவதற்கு ஏற்பாடு உள்ளது. அதற்கமையவே நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளது. அதேவேளை, பேரிடர் தொடர்பில் விவாதிப்பதற்கு நாடாளுமன்ற […]

அரசியல் இலங்கை செய்தி

ஐ.எம்.எப். ஒப்பந்தம் மறுசீரமைக்கப்பட வேண்டும்: சஜித் வலியுறுத்து!  

  • December 11, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயல்முறை அரசியல் மயப்படுத்தப்படக்கூடாது  என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11)  வலியுறுத்தினார். “ நிவாரணங்களை  பெறுவதற்கு  அரச அதிகாரிகள் மாத்திரமின்றி  “பிரஜா சக்தி” போன்ற சமூகக் குழுக்களின்  சான்றுபடுத்தலையும் கோருவது ஏற்புடையது அல்ல. இது  நிவாரண பணிகளை வேறொரு திசையை நோக்கி நகர்த்தும் நடவடிக்கையாகும். எனவே, தூய்மையான பொறுப்புணர்வுள்ள பொறிமுறையொன்றை செயல்படுத்த வலியுறுத்துகின்றோம்.” எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். “    நாட்டின்  இடர் முகாமைத்துவ செயல்முறை […]

error: Content is protected !!