அரசியல் இந்தியா செய்தி

இலங்கையை மீளக்கட்யெழுப்ப 450 மில்லியன் டொலர்களை வழங்குகிறது இந்தியா!

  • December 23, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்குரிய நிதி உதவி திட்டத்தை இந்தியா இன்று (23) அறிவித்துள்ளது. இதற்கமைய 450 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். 350 மில்லியன் டொலர் சலுகை கடனாகவும், 100 மில்லியன் டொலர் கொடையாகவும் இலங்கைக்கு வழங்கப்படும். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்று (22) மாலை இலங்கை வந்தடைந்தார். இன்று (23) காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பேச்சு […]

இலங்கை செய்தி

மோடியின் சிறப்பு தூதுவராகவே ஜெய்சங்கர் வருகிறார்: அநுரவுடன் நாளை சந்திப்பு!

  • December 22, 2025
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்   (22) இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவரின் இலங்கை விஜயத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை இன்று (22) வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையின் அடிப்படையில் இவ்விஜயம் இடம்பெறுகின்றது. பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு “ ஒப்பரேஷன் சாகர் பந்து” திட்டம் ஊடாக பல்வேறு உதவிகளை […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை நோக்கி சர்வதேச பிரதிநிதிகள் படையெடுப்பு: முக்கிய புள்ளிகளை களமிறக்கும் டில்லி, பீஜிங்!

  • December 21, 2025
  • 0 Comments

சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலையியல் குழு தலைவர் ஜாவோ லெஜி நாளை மறுதினம் (23) இலங்கை வருகின்றார். சீனாவில் அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அடுத்தப்படியாக அரசாங்கத்தின் மூன்றாவது முக்கிய நபராக இவர் கருதப்படுகின்றார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (23) கொழும்புவரும் நிலையிலேயே இவரது விஜயமும் இடம்பெறுகின்றது. ஜாவோ லெஜியின் கொழும்பு பயணம் தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே வெளியாக இருந்தன. இவ்விஜயத்தின்போது அவர் இலங்கை மீண்டெழுவதற்குரிய உதவித்திட்டங்களையும் அறிவிக்க இருந்தார். இந்நிலையிலேயே […]

அரசியல் இலங்கை செய்தி

31 ஆம் திகதிக்குள் செய்து முடிங்கள்: ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

  • December 20, 2025
  • 0 Comments

“ரீ பில்டிங் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இன்று (20) நடைபெற்றது. பாதுகாப்பு, விவசாயம், நீர்ப்பாசனம், நீர் வழங்கல், மீன்பிடி, போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் நிர்மாணம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சுகளின் செயலாளர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். வீடுகளை சுத்தம் செய்வதற்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு […]

அரசியல் இலங்கை செய்தி

திங்களன்று இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

  • December 20, 2025
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் எதிர்வரும் திங்கட்கிழமை (22) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டியே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார். இலங்கைக்கான மேலதிக உதவித் திட்டங்கள் தொடர்பான அறிவிப்பையும் அவர் வெளியிடவுள்ளார் என தெரியவருகின்றது. இலங்கைக்கு உயர்மட்ட பிரதிநிதியொருவரை சீனா அனுப்பி இருந்த நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் இடம்பெறுகின்றது.

அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? திங்கள் மதிப்பீட்டு அறிக்கை கையளிப்பு!

  • December 19, 2025
  • 0 Comments

பேரிடரால் இலங்கைக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பான உத்தேச மதிப்பீட்டு அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை உலக வங்கியால் கையளிக்கப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு, “ பேரிடரால் ஏற்பட்ட மொத்த இழப்பு தொடர்பான உத்தேசத்தை மேற்படி அறிக்கைமூலம் அறியமுடியும். 500 பில்லியன் ரூபா மேலதிக நிதி சந்தைக்குவரும்போது ஏற்படும் பணவீக்கம் தொடர்பான காரணங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனில் பொருட்கள் […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசு பொறுப்பு கூறவேண்டும்: நாடாளுமன்றில் வலியுறுத்து

  • December 19, 2025
  • 0 Comments

பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (18) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “தாழமுக்கம் தாக்கம் ஏற்படுவதால் சீரற்ற காலநிலை நிலவக்கூடும், இதற்கு தயாராக வேண்டும் என வளிமண்டளவியல் திணைக்களம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது. வெள்ள அபாயம் குறித்தும் எச்சரிக்கப்பட்டிருந்தது. எனினும், அரசாங்கத்தால் […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கையின் சுற்றுலாத் துறையையும் தாக்கியதா டித்வா புயல்?

  • December 18, 2025
  • 0 Comments

பேரிடருக்கு மத்தியிலும் நாம் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கவில்லை. சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்குரிய வேலைத்திட்டம் தொடர்கின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 22 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார். “நெருக்கடியான காலகட்டத்திலும் நாம் சுற்றுலாத்துறையை கைவிடவில்லை. சுற்றுலாப் பயணிகளை அழைத்துவரும் வேலைத்திட்டம் முறையாக முன்னெடுக்கப்பட்டது. டிசம்பர் மாதத்தில் முதல் 10 நாட்களுக்குள் 93 […]

அரசியல் இலங்கை செய்தி

டித்வா புயல்: சபாநாயகரிடம் முக்கிய கடிதம் கையளிப்பு: அடுத்து நடக்க போவது என்ன?

  • December 18, 2025
  • 0 Comments

டித்வா புயலால் ஏற்படும் தாக்கங்களை எதிர்கொள்வதற்குரிய முன்னாயத்த நடவடிக்கைகள் இடம்பெறாமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்குமாறுகோரும் கடிதம் சபாநாயகரிடம் இன்று (18) கையளிக்கப்பட்டுள்ளது. எதிரணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன இக்கடிதத்தை எழுதியுள்ளார். அதனை சபாநாயகரிடம் கையளிப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட எதிரணி எம்.பிக்களையும் அவர் அழைத்துச் சென்றுள்ளார். சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, “ டித்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிர் இழப்புகள், சொத்துச் சேதங்கள் […]

அரசியல் இலங்கை செய்தி

டித்வா புயலிலும் “அரசியல்”?

  • December 18, 2025
  • 0 Comments

அனர்த்தத்தை பயன்படுத்தி அரசியல் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படவில்லை என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பேரிடரில் இருந்து மீள்வதும், நாட்டை கட்டியெழுப்புவதுமே தற்போது முதன்மை நோக்கமாக உள்ளது எனவும் அவர் கூறினார். அனர்த்தத்தை பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் நடத்துவதாகவும், நிவாரண பொறிமுறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இந்நிலையிலேயே அரசாங்க ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “ அனர்த்த நெருக்கடியின்போது அரச ஊழியர் வழங்கிய சேவை போற்றத்தக்கது. நிவாரண பணிகள் […]

error: Content is protected !!