இலங்கை

இலங்கை – வாடகை வீட்டிற்கு குடிபெயரும் சந்திரிகா!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கொழும்பில் உள்ள தனது அதிகாரப்பூர்வ அரசாங்க இல்லத்தில் இருந்து அடுத்த இரண்டு அல்லது மூன்று  வாரங்களுக்குள் வெளியேறி வாடகை வீட்டிற்கு குடிபெயர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் ஒருவர் வெளியிட்ட தகவலின்படி, அவரது உடல்நலக்குறைவு காரணமாக இந்த நடவடிக்கை தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலை காரணமாக, அவர் அரசாங்கத்திடம் 34 மாத கால நீட்டிப்பு கோரியுள்ளதாகவும்  கூறப்படுகிறது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது வசித்து வரும் கொழும்பில் உள்ள கெப்பட்டிபொல மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்ய நவம்பர் 1, 2025 வரை கால அவகாசம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகள் தங்கள் இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!