இலங்கை – வாடகை வீட்டிற்கு குடிபெயரும் சந்திரிகா!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கொழும்பில் உள்ள தனது அதிகாரப்பூர்வ அரசாங்க இல்லத்தில் இருந்து அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வெளியேறி வாடகை வீட்டிற்கு குடிபெயர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் ஒருவர் வெளியிட்ட தகவலின்படி, அவரது உடல்நலக்குறைவு காரணமாக இந்த நடவடிக்கை தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலை காரணமாக, அவர் அரசாங்கத்திடம் 34 மாத கால நீட்டிப்பு கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது வசித்து வரும் கொழும்பில் உள்ள கெப்பட்டிபொல மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்ய நவம்பர் 1, 2025 வரை கால அவகாசம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையில் அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகள் தங்கள் இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.