Site icon Tamil News

சமூக ஆர்வலர் பியத் நிகேஷலா கைது

சமூக ஆர்வலர் பியத் நிகேஷலா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜூலை 09 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவத்தை நேரலையில் ஒளிபரப்பிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

மேற்படி சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக குறித்த செயற்பாட்டாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version