ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு – 100 முறை சுட்ட மர்ம நபர் – பலர் காயம்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் பயங்கரவாத செயலோ குண்டர் கும்பல் தாக்குதலோ அல்ல என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 60 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இரு ரைபிள் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சந்தேக நபர் துப்பாக்கியால் 100 முறை சுட்டிருக்கக்கூடும் என்று காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அவர் கார்களையும் காவல்துறையினரையும் குறிவைத்ததாகக் கூறப்படுகின்றது. பலத்த சத்தம் கேட்டதாக அருகில் இருந்தவர்கள் கூறினர்.

பிடிபட்ட நபர் மீது இதுவரை குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடத்தப்படுவது அரிதாகும்.

ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை தொடர்கிறது.

(Visited 38 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித