இலங்கை செய்தி

என் அம்மாவின் சவப்பெட்டியை அனுப்பி வையுங்கள்!! இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் மகள் உருக்கம்

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களுக்கு மத்தியில் தாதியாக பணியாற்றி கடந்த 7ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த இலங்கையைச் சேர்ந்த அனுலா ஜயதிலகா என்ற பெண் உயிரிழந்தமை நேற்று (17) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

49 வயதான அனுலா இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.

அனுலாவின் மரணம் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்னர், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரவுக்கு அவரது மகள் செய்தி அனுப்பியிருந்தார்.

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் அங்குள்ள உணர்ச்சிகரமான விடயங்களை மேற்கோள் காட்டி தனது முகநூல் கணக்கில் சேர்த்திருந்த குறிப்பு இதுவாகும்.

“ஐயா, நான் அனுலாவின் மகள், என் அம்மா இருக்கிறாள் என்று என் இதயம் சொல்கிறது, என் அம்மா நாட்டை விட்டு வெளியேறும்போது எனக்கு 16 வயது, என் வாழ்க்கையில் 10 ஆண்டுகளில் 90 நாட்கள் என் அம்மாவுடன் நெருக்கமாக இருந்தேன்.

என் அம்மா. இந்த சம்பவத்துக்கு முந்தின நாள் இரவு என்னுடன் பேசினார். நான் இருக்கேன், என் அம்மாவுக்கு என் திருமணத்தை அழகா செய்ய வேண்டும் என்று ஆசையா இருந்தது.

அம்மாவுக்காக காத்திருக்கிறேன், அம்மா உயிரிழந்திருந்தால் நான் அவளுடைய இறுதிச் சடங்குகளைச் செய்ய விரும்புகிறேன், அதனால் அவரது சவப்பெட்டியை எனக்காக அனுப்பி வையுங்கள்.” என கூறியுள்ளார்.

மோதல்களுக்கு மத்தியில் உயிரிழந்த அனுலா ஜயதிலவுக்கு அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை வழங்க இஸ்ரேல் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content