கனடாவில் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் – பாதிக்கப்படும் சிறு வணிக வியாபாரிகள்!

கனடாவில் தபால் ஊழியர்கள் திடீரென வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தபால் ஊழியர்கள் மீது அரசாங்கம் மேற்கொள்ளும் மறைமுக தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் CUPW உறுப்பினர்கள் நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சில ஆண்டுகளாக அஞ்சல் விநியோக சேவையை கணிசமாகக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மத்திய அரசாங்கத்தின் இந்த செயற்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தொழிற்சங்கத்தின் தலைவர் நிக்கோல் சௌனார்ட், இந்த வளர்ச்சியால் அவர்கள் திகைத்துப் போயுள்ளனர், மேலும் தொழிலாளர்கள் தாங்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து சோகமாகவும் விரக்தியுடனும் உள்ளனர் என்றார்.
இதற்கிடையில் வேலைநிறுத்தம் செய்யும் அஞ்சல் ஊழியர்களுக்கு கனேடிய சுதந்திர வணிக கூட்டமைப்பின் தலைவரிடமிருந்து எந்த அனுதாபமும் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த வேலைநிறுத்தத்தால் சிறு வணிகங்களை மேற்கொள்பவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. பல நிறுவனங்கள் காகித விலைப்பட்டியல்கள் அல்லது காசோலைகளைப் பயன்படுத்தி வணிகம் செய்வதால், அஞ்சல் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது பாதிக்கப்படுவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக விநியோகச் சங்கிலி சீர்குலைவுகளுக்குப் பிறகு வேலைநிறுத்தம் ஒரு மோசமான செய்தி என்று கனடிய வர்த்தக சபை கூறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.