ஐரோப்பா செய்தி

பொது இடங்களில் முகத்திரை அணிவதை தடை செய்ய போர்ச்சுகல் பாராளுமன்றம் ஒப்புதல்

தீவிர வலதுசாரி சேகா (Sega) கட்சியால் முன்மொழியப்பட்ட பாலினம் அல்லது மத காரணங்களுக்காக பொது இடங்களில் முகத்திரை அணிவதைத் தடை செய்யும் மசோதாவுக்கு போர்ச்சுகல் (Portugal) பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மசோதாவின் கீழ், பொது இடங்களில் பர்தாக்கள் (burqas) மற்றும் நிகாப்கள் (niqabs) அணிபவர்களுக்கு 200 முதல் 4,000 யூரோக்கள் ($234-$4,670) வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும், ஒருவரை முகத்திரை அணிய கட்டாயப்படுத்தினால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

விமானங்கள், இராஜதந்திர வளாகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் முகத்திரை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மசோதா ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சௌசாவால் (Marcelo Rebelo de Sousa) அங்கீகரிக்கப்பட்டால் போர்ச்சுகல் முகத்திரை அணிவதை தடை விதித்த பிரான்ஸ் (France), ஆஸ்திரியா (Austria), பெல்ஜியம் (Belgium) மற்றும் நெதர்லாந்து (Netherland) உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் இணையும்.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி