ஆசியா

தனது மகளின் வாரிசு அந்தஸ்தை உறுதிப்படுத்திய வட கொரியத் தலைவர் ; சியோல் உளவு நிறுவனம்

தென்கொரியாவின் உளவுத்துறை வடகொரியாவின் அடுத்த தலைவராகக் கிம் ஜோங் உன்னின் மகள் கிம் ஜூ ஏ தேர்வுசெய்யப்படலாம் என்று தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் சீனாவில் நடந்த மாநாட்டில் ஜூ ஏ கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

சீன அதிபர் ஸி சின்பிங், ர‌ஷ்ய அதிபர் புட்டின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் இருந்த அம்மாநாட்டில் கிம் ஜோங் உன்னுடன் ஜூ ஏ இருந்தார். மேலும் ஜூ ஏவுக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.

பல ஆண்டுகளாகவே ஜூ ஏ வடகொரியாவின் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது சோல் மீண்டும் அதுதொடர்பாகத் தகவல் வெளியிட்டுள்ளது.

இருப்பினும் ஜூ ஏவுக்கு அண்ணன் இருப்பதாகவும் அவர் ரகசியமாகத் தலைமைத்துவப் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கிம் ஜோங் உன்னுக்கு எத்தனைப் பிள்ளைகள் உள்ளனர் என்பது பற்றிய சரியான தகவல்கள் ஏதும் இல்லை. அவரின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்