செய்தி

நியூசிலாந்தில் தனது பிள்ளைகளை கொலை செய்து 4 வருடங்களாக கிடங்கில் வைத்திருந்த தாய்

நியூசிலாந்தின் ஒக்லாந்தில் தனது இரண்டு பிள்ளைகளை கொன்று, பின்னர் ஒரு சேமிப்பு அறையில் விட்டுச் சென்ற ஒரு தாய், கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்தப் பெண் தனது 8 வயது மகளையும் 6 வயது மகனையும் உணவில் விஷம் வைத்து கொன்றார்.

பின்னர் குழந்தைகளின் உடல்கள் மூன்று மெல்லிய பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டு, ஒரு சூட்கேஸில் வைக்கப்பட்டு, கொண்டு செல்லப்பட்டன.

அதனை தொடர்ந்து அந்தப் பெண் தனது பெயரை மாற்றி தென் கொரியாவுக்குத் தப்பிச் சென்றதை நியூசிலாந்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அங்கு அவர் நான்கு ஆண்டுகளாக பிள்ளைகளின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு கட்டணத்தையும் செலுத்தி வந்துள்ளார்.

தென் கொரியாவில் கைது செய்யப்பட்ட தாய், நியூசிலாந்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டார்.

கணவர் இறந்த பிறகு அந்தப் பெண் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது.

14 நாள் விசாரணைக்குப் பிறகு தாய் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி