இலங்கை

மொரகஹகந்த நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பும் அபாயம்

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் தற்போது 97.87% ஆக உயர்ந்துள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இன்னும் சில நாட்களுக்குள் மழை தொடர்ந்து பெய்தால், நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின் படி நாட்டில் நிலவும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் காற்றின் வேகமும் அதிகரிக்கும் என அதன் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் முழுமையாக நிரம்பும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!