ஆசியா

மெட்டா நிறுவனத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும் மலேசியா!

ஃபேஸ்புகின் தாய் நிறுவனமான மெட்டா  மீது சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக மலேசியா அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா பிளாட்ஃபார்ம்கள், அதன் சமூக ஊடகத் தளத்தில்  தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை அகற்றத் தவறியமைக்காக மேற்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அவதூறு, ஆள்மாறாட்டம், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் மோசடி விளம்பரங்கள் தொடர்பான “கணிசமான அளவு விரும்பத்தகாத உள்ளடக்கங்கள் ஃபேஸ்புகில் இருப்பதாகவும், இதனால் இளையவர்கள் பாதிக்கப்படுவதாகவும் லேசிய தகவல் தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தை அகற்ற மெட்டாவைத் தொடர்புகொள்ள பல தடைவைகள் முயற்சிக்கப்பட்டதாகவும், அது பலனளிக்கவில்லை எனவும் ஆணையம் கூறியுள்ளது.

இந்நிலையில்,  மெட்டாவிடமிருந்து போதுமான ஒத்துழைப்பு இல்லாததால், மெட்டாவிற்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

(Visited 14 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!