உலகம்

புகுஷிமா பேரழிவிற்குப் பிறகு அணு ஆலையை மீண்டும் திறக்கும் ஜப்பான் -முடிவு இன்று!

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற புகுஷிமா (Fukushima) பேரழிவிற்குப் பிறகு ஜப்பான்  தனது அணுமின் நிலையத்தை மீளவும் ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தி வருகிறது.

அதற்கமைய  உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்குவதற்கான முடிவு இன்று எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டால் வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி ஆலையில் உள்ள ஏழு உலைகளில் முதலாவது உலையை மீண்டும் செயல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள டோக்கியோ மின்சார நிறுவனத்தின்  (TEPCO) செய்தித் தொடர்பாளர், புகுஷிமா பேரழிவு போன்ற ஒரு விபத்தை மீண்டும் ஒருபோதும் செய்ய மாட்டோம் என்றும், நிகாடா குடியிருப்பாளர்கள் ஒருபோதும் இதுபோன்ற எதையும் அனுபவிக்க மாட்டார்கள் என்றும் உறுதியளிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

டோக்கியோவிலிருந்து சுமார் 220 கிமீ வடமேற்கே அமைந்துள்ள காஷிவாசாகி-கரிவா (Kashiwazaki-Kariwa)  அணு உலையானது  கடந்த 2011 ஆம் ஆண்டு புகுஷிமாவை தாக்கிய சுனாமியின் காரணமாக மூடப்பட்ட 54 அணுஉலைகளில் ஒன்றாகும்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!