இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

ஈரான் – இஸ்ரேல் மோதல்! இலங்கையர்களுக்கு எரிபொருள் தொடர்பில் வெளியான தகவல்

ஈரான் – இஸ்ரேல் மோதல் குறித்த கவலைகள் இருந்த போதிலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு போதுமான எரிபொருளை இலங்கை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கான எரிபொருள் மலேசியா, சிங்கப்பூர், ஓமான் மற்றும் இந்தியா போன்ற பாதிக்கப்படாத நாடுகளிலிருந்து பெறப்படுகின்றன.

லங்கா ஐஓசி, சினோபெக் மற்றும் ஆர்.எம் பார்க் போன்ற பிற விநியோகஸ்தர்களும் தடையற்ற விநியோகங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மசகு எண்ணெய் இறக்குமதி நிலையானதாக உள்ளதுடன், முழு ஆண்டுக்குமான கொள்வனவு கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், எரிபொருள் பற்றாக்குறை அல்லது விலை உயர்வு குறித்த சமூக ஊடக வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச சந்தையில் விலை நிலையானதாக இருப்பதாகவும், அடுத்த மாதம் விலை உயர்வுக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும், இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!