விமானிகள் பற்றாக்குறையால் சிரமத்தில் இந்திய நிறுவனம்
ஒரு பெரிய இந்திய விமான நிறுவனம் அதன் விமானிகள் கிடைக்காததால் பரவலான விமான ரத்து மற்றும் தாமதங்களுக்கு மத்தியில் இந்த மாதம் தனது செயல்பாடுகளை குறைத்துள்ளது.
மார்ச் 31 முதல், விஸ்தாரா ஏறக்குறைய 150 விமானங்கள் ரத்து செய்துள்ளது மற்றும் 200 விமான தாமதபடுத்தியுள்ளது.
ஏர் இந்தியாவுடன் விமான நிறுவனம் இணைந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விமானிகள் வெகுஜன விடுமுறை சென்றதால் இந்த இடையூறு ஏற்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
விஸ்தாரா அதிகாரி ஒருவர்,விமான நிறுவனம் “தற்காலிகமாக அதன் நெட்வொர்க்கை குறைத்து வருகிறது” என்றும், ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் கூறினார்.





