இந்தியா செய்தி

இஸ்ரோ வரலாற்றிலேயே அதிக எடையுள்ள செயற்கைக்கோள்: எல்விஎம் 3 மூலம் விண்ணில் பாய்கிறது

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அமெரிக்காவின் ‘புளூபோர்ட்-6’ என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை எதிர்வரும் டிசம்பர் 24-ஆம் திகதி விண்ணில் ஏவவுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து எல்விஎம் 3 ரக ராக்கெட் மூலம் காலை 8.55 மணிக்கு இந்த ஏவுதல் நடைபெறவுள்ளது. 6,500 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்தியதிலேயே அதிக எடையுள்ள செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைதூரப் பகுதிகளுக்கு அதிவேக 5G இணையதள சேவைகளை வழங்க உதவும் இந்தத் திட்டம், இஸ்ரோவின் வர்த்தக பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!