இலங்கை செய்தி

மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

மகாவலி ஆற்றுப் பகுதியை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் 24 மணி நேரத்திற்கு நீட்டித்துள்ளது.

இந்த எச்சரிக்கை நாளை (20) மாலை 5.30 வரை அமலில் இருக்கும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மகாவலி நீரேந்தும் பகுதிகளில் சில இடங்களில் பெய்த பலத்த மழை மற்றும் மகாவலி பள்ளத்தாக்கின் மேல்நிலை நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றம் காரணமாக ஏற்படும் சிறிய வெள்ள அபாயம் காரணமாக நேற்று (18) இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்தும் கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிகந்த, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!