உலகம் ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் 9 வயது சிறுமி குத்திக் கொலை: “அவள் ஒரு தேவதை” என குடும்பத்தினர் உருக்கம்

பிரித்தானியாவின் வெஸ்டன்-சூப்பர்-மேயர் (Weston-super-Mare) பகுதியில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட ஒன்பது வயது சிறுமி ஆரியா தோப்பிற்கு (Aria Thorpe) அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஆரியா “மகிழ்ச்சியும் ஒளியும் நிறைந்த ஒரு தேவதை” என்றும், அவளது இழப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனையை அளித்துள்ளதாகவும் அவளது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பாடவும் நடனமாடவும் விரும்பும் ஆரியா, கணிதப் புதிர்களில் அதிக ஆர்வம் கொண்டவள் என அவளது தந்தை உருக்கமாக நினைவுகூர்ந்துள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 15 வயது சிறுவன் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, அவர் பிரிஸ்டல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

எதிர்வரும் ஜூன் மாதம் இதற்கான வழக்கு விசாரணை நடைபெறவுள்ள நிலையில், சிறுமி உயிரிழந்த பகுதியில் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!