செய்தி

இலங்கையில் கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிப்பு

கண்டி – உடதும்பர, மீமுரே பகுதியில் சிற்றூர்தி ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

படுகாயமடைந்த மற்றுமொரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதன்படி குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தெல்தெனிய மருத்துவமனையிலிருந்து பேராதெனிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் நேற்றிரவு கண்டி, உடுதும்பர-மீமுரே பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி