உலகம்

ஆப்பிரிக்க நாடான பெனினில் ஆட்சி கவிழ்ப்பு! எல்லை மூடப்பட்டதாக அறிவிப்பு!

மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனினில் (Benin) இராணுவ வீரர்களின் ஒரு பகுதியினர்  ஜனாதிபதி பேட்ரிஸ்  டாலோனை ( Patrice Talon) பதவி நீக்கம் செய்து அதிகாரத்தைக் கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர்.

பெனினில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திலிருந்து வந்த செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தலைமையகமான கோட்டோனோவின் (Cotonou)  முக்கிய நகரத்தில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அரசியலமைப்புச் சட்டம் இடைநிறுத்தப்படுவதாகவும், அனைத்து நில எல்லைகளையும் , நாட்டின் வான்வெளியையும் மூடுவதாகவும் வீரர்கள் அறிவித்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் நிலமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், இராணுவத்தின் பெரும்பகுதி இன்னும் விசுவாசமாக உள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் ஷெகுன் அட்ஜாடி பக்காரி (Shegun Adjadi Bakari) தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த குழுவினர் தொலைக்காட்சியை மட்டுமே கைப்பற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!