ஆசியா செய்தி

வட கொரியாவிற்கு தப்பிச் சென்ற அமெரிக்க இராணுவ வீரர்! முதன் முறையாக வெளியான தகவல்

தென்கொரியாவில் இருந்து வடகொரியாவுக்கு தப்பிச் சென்ற அமெரிக்க இராணுவ வீரர், தனது காவலில் இருப்பதை வடகொரியா ஒப்புக்கொண்டுள்ளது.

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த சிப்பாய் தொடர்பான தகவல்களை வழங்குமாறு வடகொரியாவிடம் இருந்து அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இது இடம்பெற்றுள்ளது.

அதன்படி, அந்த இராணுவ வீரர் தொடர்பாக வடகொரியா பதில் அளித்திருப்பது இதுவே முதல்முறை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், இராணுவ வீரருக்கு வடகொரியாவின் பதில் தொடர்பான மேலதிக தகவல்களை தற்போதைக்கு வெளியிட முடியாது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஆனால் அவரை மீண்டும் அழைத்து வர முயற்சிப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

23 வயதான அமெரிக்க இராணுவ வீரர் டிராவிஸ் கிங், கடந்த 18ம் திகதி தென் கொரியாவில் இருந்து வடகொரியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

அவர் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தபோது தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 16 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி