ஆஸ்திரேலியா உலகம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஊதிய மோசடி: விக்டோரியா காய்கறிப் பண்ணை மீது வழக்கு

A Victorian vegetable farm has been sued for underpaying migrants

“ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணுக்கு கிழக்கே அமைந்துள்ள ‘பாமர்ஸ்’ (Bulmers) காய்கறிப் பண்ணை, 28 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சுமார் 6 இலட்சத்து 45 ஆயிரம் டொலர் ஊதியத்தைக் குறைவாக வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2019 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், வேலை நேரத்தைக் கணக்கிடாமல் நிலையான வாராந்திர ஊதியத்தை வழங்கியதன் மூலம் அந்நிறுவனம் தொழிலாளர் சட்டத்தை மீறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு தொழிலாளிக்கும் 1,500 முதல் 39,000 டொலர் வரை நிலுவைச் சம்பளம் வழங்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ள நியாயமான பணி குறைதீர்ப்பாளர் (Fair Work Ombudsman), விமானக் கட்டணம் மற்றும் தங்குமிட வசதிகளுக்காகத் தொழிலாளர்களின் சம்பளத்தில் சட்டவிரோதமாகப் பணம் பிடித்தம் செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கீரை மற்றும் புரோக்கோலி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்தப் பண்ணை மீதான விசாரணை, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

Puvan

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!