இலங்கை

நாளை நடக்கப்போவது என்ன? இன்று வெளியான அறிக்கை

நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக வலுவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்ட வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், நாளை (8) வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பல இடங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகமாக உள்ளது.

மேலும், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் தற்காலிக பலத்த காற்றோட்டம் மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடியதால் பொது மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!