இலங்கை

“ஜனநாயகத்துக்காக முன்னிலையாவதற்கு பதவிகள் தேவையில்லை”: நாமல் ராஜபக்ச

ஜனநாயகத்துக்காக முன்னிலையாவதற்கு பதவிகள் தேவையில்லை. எதிரணிக்குரிய பொறுப்பை நாம் நிறைவேற்றுவோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று (31) தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஏதேச்சாதிகார பயணத்துக்கு எதிராகவே 21 ஆம் திகதி ஒன்றிணையவுள்ளோம்.நல்லாட்சியின்போது எதிரணிக்குரிய பொறுப்பை நாம் சிறப்பாக நிறைவேற்றினோம். இனியும் அவ்வாறு நடப்போம்.

அரசியல் என்பது தருணம் பார்த்து நடத்த வேண்டியது அல்ல. மக்களுக்கு பிரச்சினை வரும்போது முன்னிலையாக வேண்டும். அந்த பணியை நாம் செய்வோம்.”எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

(Visited 5 times, 5 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்